shadow

shankar and ajithஅஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படமும், ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியிட இருதரப்பு தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ள நிலையில் திடீரென ஒரு பிரபல பத்திரிகையில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றினால் ஷங்கர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நேற்று பிரபல பத்திரிகை ஒன்று பொங்கலுக்கு ரிலீஸாகும் திரைப்படத்தில் முதலில் பார்க்க விரும்பும் திரைப்படம் எது என்று ஒரு சர்வேயை இணையதளம் மூலம் எடுத்தது. அதில் ‘என்னை அறிந்தால், ஆம்பள, ஐ, ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த சர்வே முடிவு நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இந்த சர்வே முடிவின்படி 72 சதவிகிதம் பேர்கள் ‘என்னை அறிந்தால் படத்தை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 27 சதவிகிதம் பேர்கள் மட்டும் ‘ஐ’ படத்தை முதலில் பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஆம்பள படத்துக்கு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே கிடைத்துள்ளது.

‘ஐ’ படத்தின் டீசர் மாபெரும் வரவேற்பு பெற்றதால் பெரும் உற்சாகத்துடன் இருந்த ஷங்கரை, இந்த சர்வே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் ‘என்னை அறிந்தால்’ படத்துடன் போட்டியிடாமல் விலகிக்கொள்ள அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அஜீது படத்துடன் போட்டியிடுவது தற்கொலைக்கு சமம் என ஷங்கருக்கு அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருவதால் பொங்கல் போட்டியில் இருந்து விலக அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் ஷங்கர் தனது ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் இந்த காரணமும் ஒன்று.

Leave a Reply