இயக்குனர் ஷங்கர் இரண்டு வருடங்களாக “ஐ’ படத்தை இயக்கிகொண்டு இருக்கின்றார். விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடலை சீனாவில் உள்ள ஒரு பிரமாண்டமான பூங்காவில் படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால் சீன அரசு அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் ஷங்கர் அசரவில்லை. ரூ.12 கோடி செலவில் சீனாவில் உள்ள பார்க் போலவே பொள்ளாச்சியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய பார்க் ஒன்றின் செட்டை ஆர்ட் இயக்குனரின் உதவியால் அமைத்து தற்போது அதில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக இந்த செயற்கை பூங்காவில் விறுவிறுப்பாக ஷங்கர் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ஒரே ஒரு பாடலுக்காக ரூ.12 கோடியை ஷங்கர் செலவு செய்ததில் தயாரிப்பு தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் மாதத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது என்றும் அதன்பின்னர் டப்பிங் மற்றும் பின்னணி இசை பணிகள் நிறைவடைந்ததும், தீபாவளிக்கு படத்தை திரையிட ஷங்கர் முடிவு செய்திருப்பதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர். ஏற்கனவே தீபாவளிக்கு ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தி, கமல்ஹாசனின் உத்தம வில்லன் ஆகிய படங்கள் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.