shadow

அனுஷ்காவை கேலி செய்தவர்கள் வெட்கப்பட வேண்டும். விராத் கோஹ்லி ஆவேசம்

kohli-instagram_032816034601இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால் வீரர்களை கொண்டாடுவதும், தோல்வி அடைந்தால் வீரர்கள் உருவப்பொம்மையை எரிப்பது அவர்களுடை வீட்டில் கல்லெறிவது என்பதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வழக்கம். குறிப்பாக கொல்கத்தா மைதானத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தால் அதோ கதிதான்.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கிய போட்டி ஒன்றில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய விராத் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். நேற்று இரவு முதல் இன்று வரை ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் என அனைத்து சமூகவலைத்தளங்களிலும் கோஹ்லியை வாழ்த்தி ரசிகர்கள் மீம்ஸ்களை வெளியிட்டவண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் விராத்கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

பல ஆண்டுகளாக நடிகை அனுஷ்கா சர்மாவை ரசிகர்கள் கேலி செய்து வருகிறார்கள். எல்லா எதிர்மறையான விஷயங்களையும் அவருடன் தொடர்புபடுத்துகிறார்கள். வெட்கக்கேடு! தங்களைப் படித்தவர்களாகக் குறிப்பிடும் அவர்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும். என்னுடைய விளையாட்டில் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எனில் அவரை ஏன் கேலி செய்யவேண்டும்? அவர் என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். நேர்மறையான விஷயங்களைத் தந்துள்ளார். மறைந்து கொண்டு அவரைக் குறை சொல்பவர்கள் வெட்கப்பட வேண்டும். அவர் மீது கொஞ்சம் மரியாதை செலுத்துங்கள். உங்கள் சகோதரியோ, காதலியோ, மனைவியோ பொதுவில் அசிங்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் முன்னால் காதலர்கள் என்றும் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாகச் கூறப்படுகிறது. இருப்பினும் அனுஷ்காவுக்கு ஆதரவாக விராத் கோஹ்லி கருத்து வெளியிட்டது அனைவரையும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

Leave a Reply