shadow

எல்.கே.யூ, யூ.கே.ஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: சென்னையில் பரபரப்பு

பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை செய்பவர்களுக்கு கடும் தண்டனை என சட்டம் கொண்டு வந்த போதிலும் இந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை. சட்டம் குறித்து யாரும் சீரியஸாக எடுக்காமல் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

சென்னை அயனாபுரத்தில் 11 வயது சிறுமியை 17 பேர் பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் சென்னை அருகே கொளப்பாக்கத்தில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஊழியர்கள் மீது புகார் எழுந்துள்ளது

பள்ளி வேனில் குழந்தைகளை அழைத்து வரும் ஊழியர்கள் இருவர் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தைகளின் பெற்றோர் ஊழியர்கள் மீது புகார் அளித்தனர். மேலும் குறிப்பிட்ட அந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply