கார்கில் தியாகியின் மகளுக்கு சேவாக் பதிலடி
கார்கில் போரில் தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர் ஒருவரின் மகளும் டெல்லி பல்கலையின் மாணவியுமான குர்மேகர் கவுர் என்பவர் சமீபத்தில் தனது ஃபேஸ்புக்கில், ‘தனது தந்தையின் மரணத்திற்கு காரணம் பாகிஸ்தான் அல்ல, கார்கில் போர் தான் என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தவண்ணம் இருந்தது.
ஒரு பள்ளி மாணவி தனது ஃபேஸ்புக்கில் நான் தேர்வு எழுதவில்லை எனது பேனாதான் தேர்வு எழுதியது என்று நக்கலாக டெல்லி மாணவிக்கு நக்கலாக பதிலளித்தார்.
இதேபோல் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தனது டுவிட்டரில் ‘நான் இரண்டு மூன்று முச்சதம் அடித்துள்ளேன். ஆனால் அது நான் அடித்த முச்சதம் அல்ல, என்னுடைய பேட் தான் அடித்தது’ என்று தன்னுடைய பாணியில் குர்மேகர் கவுருக்கு பதிலடி கொடுத்தார்.
இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த மைசூரு எம்பி பிரதாப் சிம்ஹா தனது டுவிட்டரில் கூறியபோது, ‘கடந்த 1993-ல் தாவூத் இப்ராஹிம், ‘நான் மக்களைக் கொல்லவில்லை. வெடிகுண்டுகள் தான் மக்களை கொன்றன” என்று கூறினார். இதற்கும் டெல்லி மாணவி கூறியதற்கும் வித்தியாசமில்லை என்றும் அந்த மாணவியின் மனதில் விஷத்தை விளைவித்தது யார் என்று தெரியவில்லை’ என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.