முதலமைச்சர் பழனிச்சாமிக்கு நடிகர் செந்தில் சவால்?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தினகரன் அணியினர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தினகரன் அணியை சேர்ந்த நடிகர் செந்தில் முதல்வருக்கு சவால் விடுத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றால் அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள தயார். ஆட்சியை கலைக்க அவர் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அதிமுகவினர் அனைவரும் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் அரசியல்வாதிகளுக்கு நாவடக்கம் மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நாஞ்சில் சம்பத் குறித்து கேள்வி கேட்டபோது என்னை பற்றி மட்டும் கேளுங்கள், அவர் குறித்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது’ என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.