ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சேவாக், கோஹ்லி ஆதரவு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா உள்பட தமிழகமெங்கும் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் சேவாக் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி ஆகியோர் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சேவாக் தனது டுவிட்டரில் தமிழிலில் ‘அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
சேவாக்கின் டிவிட்டர் பதிவின் கீழ் டுவீட் செய்திருந்த விராத் கோலி,”தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக,தமிழ் மொழியில் டுவீட் செய்ததற்கு நன்றி சேவாக். உங்கள் மீதான மதிப்பு மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.”என தெரிவித்துள்ளார்.
விராத்கோஹ்லி பீட்டா அமைப்பின் ஆதரவாளராக இருந்தும் தமிழர்களின் போராட்டத்தில் உள்ள உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.