தாய் கண்முன்னே விபத்தில் பலியான இரு குழந்தைகள்: இங்கிலாந்தில் பரிதாபம்
இங்கிலாந்து நாட்டில் உள்ள Coventry என்ற நகரில் தாயின் கண்முன்னே அவரது இரண்டு குழந்தைகளை கார் மோதிய விபத்தால் பலியான சம்பவம் அந்நாட்டையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
Coventry நகரில் சாலையை கடக்க முயன்ற இரண்டு வயது குழந்தை காஸ்பர் மற்றும் அவரது சகோதர் ஆறு வயது கார்வே ஆகியோர், வேகமாக வந்த கார் ஒன்றினால் மோதி, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்
சிசிடிவி கேமிரா மூலம் இந்த விபத்து குறித்து விசாரணை செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி, நிற்காமல் சென்ற காரை கண்டுபிடித்தனர். அந்த காரில் பயணம் செய்த 53 வயது ஆண், மற்றும் 41 வயது பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.