முதல்வருக்கு ரூ.5000 அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நிதியமைச்சர் அருண்ஜெட்லி மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார். இதுகுறித்து அருண்ஜெட்லி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் பதில் கூறவில்லை
எனவே நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத முதல்வருக்கு டெல்லி நீதிமன்றம் ரூ.10000 அபராதம் விதித்தது. ஏற்கனவே இதே நீதிமன்றம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.5000 அபராதம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மீது குற்றச்சாட்டு கூறிய முதல்வர் அதேபோல் அந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.