shadow

மாணவர்களுக்கு 20 நாட்களுக்குள் புத்தகம், சீருடைகள் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் இன்று (13ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களுக்கு 20 நாட்களுக்குள் புத்தகம், சீருடை, புத்தக பை வழங்கப்படும்.

பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படும்.

மாணவர்கள் அனைவரும் தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும், விடுமுறை எடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.