கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல பெய்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம், குடவாசல், கொரடாச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

அதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அம்மாவட்ட பள்ளிகளுக்கு மடும் இன்று விடுமுறை என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

சென்னை உள்பட மற்ற மாவட்ட நிலவரம் குறித்த தகவல்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply