shadow

செங்கோட்டையனின் அதிரடி அறிவிப்புகள்: கல்வித்துறையில் மாற்றம் வருமா?

10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் பல அறிவிப்புகளும் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது சட்டமன்றத்தில் மேலும் 37 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படுமானால் தமிழக கல்வித்துறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

 தமிழக சட்டப்பேரவை தொடங்கிய 2ம் நாளான நேற்று பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. காலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் 37 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். மலை கிராமங்களில் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்

• மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

• 486 அரசு பள்ளிகளில் கணினி வழி கற்றல் மையங்கள் அமைக்கப்படும்

• ரூ.30 கோடி செலவில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படும்

• கல்வி வளர்ச்சியில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமை கல்வி விருது வழங்கப்படும்

• 3 கோடி செலவில் 32 மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்

• 4084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

• மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்

• கீழடியில் ஒரு நூலகம் அமைக்கப்படும்

• 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்

• அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

• முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு 6000 மாத உதவித்தொகை வழங்கப்படும்

• 89 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்

Leave a Reply