shadow

தமிழகத்தில் தற்போது பள்ளி கல்லூரிகள் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிப்ரவரி 10 வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது