shadow

தெண்டுல்கர் செய்யாததை செய்து காட்டியவர் விராத் கோஹ்லி. கங்குலி புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் 0,13 என இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினார். இதனால் ஆர் மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி, விராத் கோஹ்லிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலியும் மனிதர் தான். அவருக்கும் சறுக்கல் ஏற்படத்தான் செய்யும். புனே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் அவர் (0, 13 ரன்) சோபிக்க தவறி விட்டார். முதலாவது இன்னிங்சில் ஆப்–ஸ்டம்புக்கு மிகவும் வெளியே சென்ற பந்தை கொஞ்சம் அவசரகதியாக அடித்து விக்கெட்டை இழந்து விட்டதாக நினைக்கிறேன். ஆனால், ஆஸ்திரேலியர்களும் அதற்கு தகுந்தவாறே பந்து வீசினர்.

விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (2014–15–ம் ஆண்டு) 4 சதங்கள் அடித்தது அசாத்தியமானவை. அதை நானும் கண்டுகளித்தேன். இது போன்று சச்சின் தெண்டுல்கர் கூட செய்ததில்லை’ என்று கூறினார்

இந்நிலையில் பெங்களூருவில் நாளை இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.

Leave a Reply