சவுதி அரேபியாவில் பயங்கர தீ விபத்து! இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி
சவூதி அரேபியா நாட்டில் உள்ள நஜ்ரன் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்பட தெற்கு ஆசியாவிலிருந்து சுமார் 9 மில்லியின் தொழிலாளர்கள் சவூதி அரேபியாவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நஜ்ரன் என்ற நகரில் தங்கி பணிசெய்யும் தொழிலாளர்கள், பைசாலியா மாவட்டத்தில் உள்ள கோல்ட் மார்க்கெட் அருகில் நடைபெறும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளனர். அப்போது அங்குள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நஜ்ரன் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.