தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. சுசித்ரா லீக் குறித்து சத்யராஜ் எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை இணையத்தில் பரவி தமிழ் சினிமா உலகையே நாறடித்து கொண்டிருக்கின்றது. அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பிரபல நடிகைகள், பிரபல நடிகர்களுக்கு விருந்தாகி வரும் வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து நடிகர் சத்யராஜ் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘நல்ல நண்பர்களை, காதலர்களை பார்த்து தேர்ந்தெடுங்கள். விளையாட்டாக எடுக்கும் புகைப்படங்கள் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைக்கு வினையாக மாறலாம். பெண் நம்முடன் இங்கு வசிப்பவள், வேற்றுகிரக வாசி அல்ல. இது போல் புகைப்படங்களை வெளியிடுவதால் பலர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால் இது போன்ற செயலை செய்ய வேண்டாம். பாதிக்கப்பட்ட பல பெண்களின் தகப்பனாக கேட்டுக்கொள்கிறேன்’ என்று சத்யராஜ் தனது கருத்தை மிக உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சத்யராஜ் போல் பலர் திரையுலகை சேர்ந்தவர்களும், சமூக நல ஆர்வலர்களும் சுசித்ரா பெயரில் லீக் செய்து கொண்டிருக்கும் மர்ம நபர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து அந்தரங்கங்கள் லீக் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.