சசிகலா சீராய்வு மனு மீது விசாரணை இல்லை: திடீர் அறிவிப்பு
சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்காது என்று தகவல் வெளிவந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 14ம் தேதி 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மறு சீராய்வு செய்ய கடந்த ஏப்ரல் மாதம் சசிகலா சார்பில் சுப்ரிம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகளில் ஒருவரான ரோஹிண்டன் பாலி நாரிமன் இந்த வழக்கிலிருந்து விலக உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் சசிகலாவின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்காது என்று தகவல் வெளியாகியது.
Leave a Reply
You must be logged in to post a comment.