shadow

குடியரசு தலைவர், பிரதமர், ராகுல்காந்திக்கு சசிகலா திடீரென கடிதம் எழுதியது ஏன்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்றுவார் என்று அதிமுகவினர் உள்பட அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் இன்று சசிகலா திடீரென குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது தாங்கள் நேரில் இரங்கல் கூறியது, தமிழக மக்களுக்கும் எனக்கும் ஆறுதல் தருகிறது. பிரதமர் எனக்கு ஆறுதல் அளித்தது பெருந்தன்மையான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விமான கோளாறுக்கு இடையே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply