30 நாட்கள் பரோலில் வருகிறாரா சசிகலா?
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா 30 நாட்கள் பரோலில் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த டிடிவி தினகரன் இன்று சசிகலாவை சந்திக்க பெங்களூர் சென்றுள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, பரோலில் வெளியே வரவுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவு உள்பட பல பிரச்சனைகள் குறித்து பரோலில் வரும் சசிகலா ஆலோசனையில் இடம்பெறுவார் என்றும் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக தனக்கு நம்பிக்கைக்குரிய வேறொருவரை முதல்வராக்கவும் அவர் முயற்சி செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.