பிப்ரவரியில் 9ல் சசிகலா முதல்வரா? ஆத்திரத்தில் அதிமுக தொண்டர்கள்
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகழ் நாள் ஆக ஆக உயர்ந்து கொண்டே போவதை பொறுக்க முடியாத சசிகலா தரப்பினர் உடனே முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும், வரும் 9ஆம் தேதி சசிகலா முதல்வர் பதவியை ஏற்பார் என்றும் அதிமுக வட்டாரங்கல் கூறுகின்றன.
நாளை பிற்பகல் 1.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூடவுள்ளதாகவும், அதில் அதிமுகவின் சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதன்பின்னர் ஜோதிடர் குறித்து கொடுத்த பிப்ரவரி 9ஆம் தேதி அவர் முதல்வர் பதவியை ஏற்பார் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் ஓபிஎஸ் அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவு, தீபாவின் எழுச்சி, அதிமுக தொண்டர்களின் வெறுப்பு இவற்றிற்கு மத்தியில் சசிகலா முதல்வர் பதவி ஏற்றால் பல திருப்பங்கள் தமிழக அரசியலில் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.