அதிமுக அலுவலகத்தில் சசிகலா புஷ்பா கணவருக்கு அடி-உதை. ரத்தக்காயத்துடன் மீட்ட காவல்துறையினர்
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த பொதுகுழுவில் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பதை அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களுக்கு மனு அளிக்கப்பட்டது. இந்த பதவிக்கு சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்படுவார் என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுவதால் யாரும் மனுக்களை வாங்க வரவில்லை
இந்நிலையில் அதிமுகவில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பாவின் கணவரும் வழக்கறிஞருமான லிங்கேஷ்வர் திலகர், மனுவை வாங்க வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் அவரை அடித்து உதைத்தனர். இதனால் ரத்தக்காயம் அடைந்த அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த்தனர். இந்த சம்பவம் காரணமாக அதிமுக அலுவலகம் அருகே பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.