shadow

சிறையில் இருக்கும் சசிகலா ஓசூர் எம்.எல்.ஏ வீட்டுக்கு சென்றாரா?


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா ஏற்கனவே ஷாப்பிங் செய்ய சிறையில் இருந்து வெளியே சென்றதாக புகார் கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இதுகுறித்து வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு பார்ப்பன அக்ராஹர சிறை அருகில் உள்ள ஓசூர் எம்.எல்.ஏ வீட்டிற்கு சசிகலா சென்றதாகவும், இதுகுறித்த ஆதாரம் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் ரூபா தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலா வெளியில் சென்று வந்ததை சிறை கேமரா பதிவுகள் உறுதிப்படுத்துவதாக ரூபா குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சசிகலா விவகாரத்தில் கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு சிறை அதிகாரிகள் தவறான தகவல் தந்து கொண்டிருப்பதாகவும் ரூபா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply