சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவா? வீட்டிலேயே சிகிச்சை நடந்ததாக தகவல்
கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவருடைய வீட்டிற்கே டாக்டர் சென்று சிகிச்சை அளித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
சசிகலாவுக்கு நேற்று காலைமுதல் சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாகவும், இதனால் அவர் தான் தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து தஞ்சையில் சசிகலா தங்கியிருக்கும் வீட்டின் அருகே இருந்த டாக்டர் கணபதி என்பவர் வரவழைக்கப்பட்டு சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
சசிகலாவை தினகரன் மற்றும் திவாகரன் மட்டுமே சந்தித்ததாகவும், வேறு யாரையும் சந்திக்க சசிகலா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.