சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்களும் இன்று ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா உள்பட நான்கு பேர்களும் ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஜெயலலிதா மட்டும் தனியாக நேற்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதனிடையே இன்று சசிகலா உள்பட மூவரும் அதே நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நான்கு ஜாமீன் மனுக்களும் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.