சசிகலா கணவர் நடராஜன் காலமானார்.
சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் காலமான கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு அவர் காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் காலை 11 மணிவரை வைக்கப்படும் என்றும் அதன் பின் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அதன்பின்னர் உடல் உறுப்புதானம் பெற்று நலமடைந்த நடராஜனுக்கு திடீரென கடந்த 16-ந் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக கவலைக்கிடமான நிலையில் இருந்த நடராஜன் உயிர் இன்று அதிகால 1.30 மணியளவில் பிரிந்தது.
நடராஜன் காலமானதை அடுத்து பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.