shadow

நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி. ஜெயிலில் சசிகலா மகிழ்ச்சி

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும் அமளிக்கிடையே ஒருவழியாகமெஜாரிட்டியை நிரூபித்தார். இந்த தகவலை கேள்விப்பட்ட சிறையில் இருக்கும் சசிகலா ‘கபாலி’ ரஜினி ஸ்டைலில் ‘மகிழ்ச்சி’ என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் முதலமைச்சர் பதவியேற்ற ஓபிஎஸ் அவர்களை பதவியில் இருந்து இறக்கிவிட்ட சசிகலா முதல்வர் பதவியை பிடிக்க பெரும் முயற்சி செய்தார். ஆனால் நீதிதேவதை கண்களை திறந்ததால் இன்று ஜெயிலில் உள்ளார். ஆனாலும் தன்னுடைய நம்பிக்கைக்குரியவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தாராம்.

இந்நிலையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட செய்தி பெங்களூரு ஜெயில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்ட போது அவர் இந்த வெற்றியைக் கேட்டதும் கபாலி ரஜினி ஸ்டைலில் ‘மகிழ்ச்சி’ என தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply