shadow

முடிந்தது பரோல்: இன்று சிறை செல்கிறார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரி சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, கணவர் நடராஜன் மறைவையொட்டி பரோலில் வெளியே வந்தார். இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட பரோல் முடிந்துவிட்டதால் இன்று காலை அவர் பெங்களூரு செல்லவுள்ளார்.

இன்று காலை 10.30 மணிக்கு தஞ்சையில் இருந்து சசிகலா, கார் மூலம் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டு செல்லவுள்ளதாகவும், மதியம் அல்லது மாலை அவர் பெங்களூரு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

பரோலில் வரும் சசிகலாவால் அரசியல் மாற்றம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் எந்தவித மாற்றமும் அவரது வருகையால் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

sasikala goes to bangalore jail today

Leave a Reply