shadow

தினகரன் கைது எதிரொலி: அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

முன்னாள் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை முழுமையாக சசிகலா குடும்பம் கைப்பற்றி கொண்டதை ஓபிஎஸ் போன்ற தலைவர்கள் வெளிப்படையாக எதிர்த்தனர் என்பது அறிந்ததே. ஆனால் சசிகலா அணியில் இருந்தவர்களே வேண்டாம் வெறுப்பாக வேறு வழியின்றி சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

சசிகலாவை அடுத்து நேற்று டெல்லி போலீசார் தினகரனை கைது செய்த சில மணி நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. மீண்டும் அலுவலகத்தின் வளாகத்தில் தற்போது ஜெயலலிதாவின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தினகரனின் கைதை கண்டித்து எந்த ஒரு அதிமுக தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதில் இருந்தே சசிகலா குடும்பத்தினர் மீது எந்த அளவுக்கு அதிமுகவின் தலைவர்கள் வெறுப்பில் இருந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

Leave a Reply