விடுதலையானார் சஞ்சய் ராவத்: சிவசேனா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கில் கைதாகி 102 நாட்கள் ஆன நிலையில் சஞ்சய் ராவத் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
102 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் விடுதலை ஆகியுள்ள நிலையில் அதனை சிவசேனா கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்
கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் அவரை கைது செய்தது தவறு என நீதிமன்றம் அமலாக்கத் துறை அதிகாரிகளை கண்டித்து அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.