ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? உறவினர் சஞ்சய்கபூர் கூறும் திடுக் தகவல்
பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள துபாய் சென்றிருந்த நிலையில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த செய்தி இந்திய திரையுலகினர்களுக்கே பெரும் அதிர்ச்சியை அளித்தது
இந்த நிலையில் ஸ்ரீதேவி கடந்த முப்பது வருடங்களாக பொரித்த உணவுகளை சாப்பிடுவதில்லை என்றும் அவருக்கு இதுவரை மாரடைப்பு வந்ததே இல்லை என்றும் கூறிய ஸ்ரீதேவியின் உறவினர், அவரது இறப்பிற்கு காரணம் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளே காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு இதுவரை என்னென்ன அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன, அவை யாவும் முறையாக செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,.
Leave a Reply
You must be logged in to post a comment.