shadow

மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்தில் சங்கராச்சாரியர் மன்னிப்பு கேட்க வேண்டும்!

நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது காஞ்சி சங்கராச்சாரியர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேசிய கீதம் ஒலிக்கும் மட்டும் எழுந்து நின்ற சங்கராச்சாரியர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது தியானத்தில் இருந்ததாக கூறியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர், மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்கருத்து கூறிய வைரமுத்து, ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதற்கு போட்டியாகவே தந்தை பெரியார் திராவிடர் கழகம் இதனை கூறியதாக தெரிகிறது.

Leave a Reply