சுந்தர் சி இயக்கும் அடுத்த பட டைட்டில் இதுதான்
‘2.0, பாகுபலி 2 படங்களுக்கு இணையாக சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படம் ஒன்றை சுந்தர் சி இயக்கவுள்ளார் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது இந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி, ஆர்யா நாயகன்களாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சங்கமித்ரா’ என்பதுதான் இந்த படத்தின் டைட்டில். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் இன்னொரு முக்கிய வேடத்தில் மகேஷ்பாபு நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தபோதிலும் அது உறுதி செய்யப்படவில்லை
Leave a Reply
You must be logged in to post a comment.