‘சண்டக்கோழி 2’ படத்தில் இருந்து விஷால் திடீர் விலகல். அதிர்ச்சியில் லிங்குசாமி
இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் வெளியான உத்தம வில்லன், ரஜினிமுருகன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ரிலீஸ் நேரத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து மிகுந்த சிரமத்துடனே ரிலீஸ் ஆனது. மேலும் அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியவில்லை. இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் நடிக்க பல நடிகர்கள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மை என்று நிரூபிக்கும் வகையில் லிங்குசாமி தயாரித்து இயக்கவிருந்த ‘சண்டக்கோழி 2’ படத்தில் இருந்து விஷால் திடீரென விலகியுள்ளார்.
இதுகுறித்து விஷால் தனது டுவிட்டரில் கவலையுடன் தெரிவித்துள்ளதாவது, ‘”சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. ‘சண்டக்கோழி 2’ கைவிடப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
‘சண்டக்கோழி 2’ படத்தின் கதை விவாதம், படப்பிடிப்பு நடைபெறும் இடம் மற்றும் நடிக்கும் நடிகர்கள், டெக்னீஷியன்கள் என அனைத்தும் முடிவடைந்து படப்பிடிப்புக்கு செல்லவுள்ள நிலையில் திடீரென விஷால் இந்த படத்தில் இருந்து விலகியது லிங்குசாமி உள்பட கோலிவுட் திரையுலகினர்களையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.