மாரத்தான்  ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஓட்ட பந்தய வீரர் சாமுவேல் வாஞ்சிரு குடும்ப பிரச்சினை காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கென்யாவில் உள்ள நியாகுருரு என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் வாஞ்சிரு. இவர் உலக அளவிலான ஓட்ட பந்தய வீரர்.

2009ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற மராத்தானில் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தார். பல்வேறு உலக போட்டிகளில் பதக்கங்களும் வென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டின் மாடியில் உள்ள படுக்கையறையில் இருந்து நள்ளிரவில் குதித்தார். இதில் படுகாயமடைந்த சாமுவேல் வாஞ்சிரு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Leave a Reply