இயற்கை, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், தற்போது ஆர்யா, விஜய்சேதுபதி நடிப்பில் புறம்போக்கு என்ற படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார். இரண்டு முன்னணி ஹிரோக்கள் நடிக்கும் இந்த படத்தில் மூன்றாவது ஹீரோவாக ஷாம் இணைகிறார்.
சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக்கேட்கும் இளைஞன் கேரக்டரில் நடிக்கிறார் ஆர்யா. இவருக்கு உதவி செய்யும் நண்பனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். இவர்கள் இருவரும் வன்முறையில் இறங்கி சமூக விரோதிகளை தீர்த்து கட்டுகின்றனர். இவர்களை பிடிக்க உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார் .அவர்தான் ஷாம். ஷாம் தன் போலீஸ் படைமூலம் ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோர்களை கட்டுப்படுத்தினாரே என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்கிக்கொண்டிருக்கிறார் ஜனநாதன்.
இந்த படத்தின் கதாநாயகியாக கோ, அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்த கார்த்திகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கதாநாயகியாக இருந்தாலும், இந்த படத்தில் இவர் யாருக்கும் ஜோடி இல்லையாம். இவரைத்தவிர வேறு நடிகைகள் இந்த படத்தில் நடிக்கவில்லை.
ஜனவரி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் 2014 தீபாவளி அன்று புறம்போக்கு திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.