மணிரத்னம், அஜித் படங்களை தவறவிட்ட சாய்பல்லவி
மணிரத்னம் இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விமானியாக நடிக்கும் கார்த்தி ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைத்தி நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் ‘பிரேமம்’ புகழ் சாய்பல்லவிதான். ஆனால் திடீரென அந்த கேரக்டருக்கு சாய்பல்லவி பொருத்தமில்லை என்று மணிரத்னம் கருதியதால் அவரை நீக்கிவிட்டு அதிதியை ஒப்பந்தம் செய்தார்.
அதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் 57வது படத்திற்கு சாய்பல்லவிதான் நாயகியாக நடிக்கவிருந்தார். ஆனால் இயக்குனர் சிறுத்தை சிவா கேட்ட கால்ஷீட் தேதிகள் சாய்பல்லவியிடம் இல்லை. அவர் ஒரு தெலுங்கு படத்திற்காக மொத்தமாக பல நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்ததால் அஜித் 57′ படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் அவர் இழந்தார்.
தமிழகத்தை சேர்ந்த நன்றாக தமிழ் பேச தெரிந்த சாய்பல்லவி ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்த்ல் நடித்து வருகிறார். விரைவில் தமிழ்ப்படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.