shadow

சாலையோரம் எரிந்த நிலையில் கோடிக்கணக்கான மதிப்பில் 500,1000 நோட்டு கட்டுகள்

4பிரதமரின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு கருப்புப்பணம், ஊழல் பணம், கள்ளநோட்டு வைத்திருப்பவர்களுக்கு பேரிடியாக உள்ளது. திருடனை தேள் கொட்டியது போல அவர்கள் தங்கள் துக்கத்தை வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் பிசியான சாலை ஒன்றில் கோடிக்கணக்கான மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் டுவிட்டரில் ஒருவர் கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தயவுசெய்து அனாதை இல்லங்கள், ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுக்குமாறும் இதுபோன்று எரித்து வீணாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3 2

Leave a Reply