shadow

முருகதாசுக்கு வில்லனாக மாறிய சூர்யா
surya-murugad
எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘இறைவி’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்புடன் தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் மிகப்பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் முதன்முதலாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள தமிழ், தெலுங்கு மற்று இந்தி படம் ஒன்றில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா உறுதி செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். முருகதாஸ் தனது டுவிட்டரில், “@iam_SJSuryah plays antagonist in my next ? Looking forward to work with him …என்று பதிவு செய்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில் தற்போது முருகதாஸ் படத்தில் வில்லன் வேடத்தை ஏற்கவுள்ளார். மேலும் அவர் பவன்கல்யாண் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘குஷி 2’ படத்தையும் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply