துருக்கி எல்லையில் குவியும் ரஷ்ய ஏவுகணைகள். மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப்பதட்டம்
கடந்த இரண்டு நாடுகளுக்கு முன்னர் ரஷ்ய நாட்டின் போர் விமானம் ஒன்றை துருக்கி நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதை அடுத்து, மூன்றாம் உலக போர் மூளுமா? என்ற பதட்டம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யா தனது அதிநவீன ஏவுகணைகளை துருக்கி-சிரியா எல்லைக்கு அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்ததோடு துருக்கி நாடு எங்கள் முதுகில் குத்திவிட்டதாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து தப்பிய விமானி, துருக்கி தங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று கூறியதால் துருக்கி வேண்டுமென்றே ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறாது. மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் துருக்கியில் இருந்து சிரியா எல்லைக்குள் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் விழுந்துள்ளதால் துருக்கி வான் எல்லைக்குள் அந்த விமானம் அத்துமீறி பறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக்க விரும்பவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ள போதிலும் ரஷ்யா தனது ஏவுகணைகளை துருக்கியின் எல்லைப் பகுதிக்கு அனுப்பியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் நீடிக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர்ப் பதற்றம் பங்குவர்த்தகங்களில் பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary: Russia readies missile systems in Syria but does “not plan to go to war with Turkey
Leave a Reply
You must be logged in to post a comment.