shadow

நாட்டை காப்பாற்ற இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தலைவர்

rssஇந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எந்த சட்டட்திலும் சொல்லப்படவில்லை. எனவே இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் அப்போது தான் நமது கலாச்சாராத்தை நம்மால் காப்பாற்ற முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் மேலும் பேசியபோது, ‘இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதில்லை. இந்துக்களை அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. எனவே நீங்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் அப்போது தான் நமது கலாச்சாராத்தை நம்மால் காப்பாற்ற முடியும்.

இந்துத்துவா காப்பாற்றப்பட்டால் தான் நாம் நமது நாட்டை காப்பாற்ற முடியும். பாரதம் என்பதும் இந்துத்துவா என்பதும் ஒன்று தான். நமது இந்து கலாச்சாரம் உயர்ந்தது. இதற்கு எந்த பங்கமும் ஏற்பட நாம் அனுமதிக்க கூடாது.

இப்போது கல்வித்துறையில் மாற்றம் வேண்டும் என்கிறோம். அதற்கு முன்னதாக நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்கள் மாறினால் எல்லா செயல்களும் நல்லவையாக நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply