shadow

மதுரை: நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு நிதியுதவி!

மதுரை வைகை ஆற்றில் இன்று கள்ளழகர் எழுந்தருளிய நிலையில் நெரிசல் காரணமாக இரண்டு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்

மேலும் 5 பக்தர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை வைகையாற்றில் நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்யப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி செய்யப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.