பெரும் பரபரப்பு
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
சென்னையில் ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.பாரதியை ஜாமீனில் விடுவிக்க திமுக வழக்கறிஞர் அணி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிகிறது
கைது குறித்து ஆர்.எஸ்.பாரதி கூறியபோது, ‘கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிப்.15 ஆம் தேதி சென்னையில் தான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானதாகவும், கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.