ரூ.50, ரூ.100 நோட்டுகளுக்கும் தடையா? மத்திய அரசு விளக்கம்
ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லது என்று மத்திய அரசு அறிவித்ததால் அதற்கு பதிலாக வங்கியில் ரூ.2000, ரூ.100 ஆகிய நோட்டுக்களை மக்கள் மாற்றி வருகின்றனர். இந்நிலையில் ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுக்களையும் செல்லாது என்று விரைவில் அறிவிக்கும் திட்டம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு தனது அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளும் செல்லாது என்று அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு இருப்பதாக பரவி வரும் வதந்தியில் சிறிதும் உண்மை இல்லை. இது வெறும் கட்டுக்கதை என்று விளக்கம் அளித்தது.
மேலும் ரூ.2000 நோட்டுக்களில் சாயம் போனால் மட்டுமே அது ஒரிஜினல் நோட்டு என்றும் அதில் ‘இன்டக்லியோ பிரிண்டிங்’ என்ற பாதுகாப்பு அம்சம் இடம்பெற்று இருப்பதாகவும், நல்ல நோட்டா என்று கண்டறிய, அதை ஒரு துணியில் தேய்த்தால், நோட்டில் உள்ள மையின் நிறம், துணியில் ஒட்டிக்கொள்ளும் என்றும் அந்த டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.