போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு சரண்
கடந்த வாரம் பிரபல ரவுடி பினு சென்னை அருகே தனது பிறந்த நாளை ரகசியமாக கொண்டாடியபோது போலீசார் சுற்றி வளைத்து 71 ரவுடிகளை கைது செய்தனர். இருப்பினும் ரவுடி பினு தப்பிவிட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து தப்பிய ரவுடி பினுவை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். உயிருடன் அல்லது சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் ரவுடி பினு அம்பத்தூரில் காவல் துணை ஆணையர் முன்னிலையில் சரண் அடைந்தார்.
தன்னை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டதை அறிந்தே ரவுடி பினு சரண் அடைந்ததாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.