shadow

ரோமானியா: ஆறே மாதங்களில் கவிழ்ந்த இடதுசாரி ஆட்சி

ரோமானியா நாட்டில் இடதுசாரி அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆட்சி அமைத்த நிலையில் ஆட்சி இன்னும் 6 மாதம் கூட முடியாத நிலையில் பிரதமர் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு போதுமான ஆதரவு இல்லை என்பது உறுதியானதால் அரசு கவிழ்ந்தது.

ரோமானியா நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 46% வாக்குகள் பெற்று சமூக ஜனநாயக கட்சி அமைத்தது. சோரின் கிரிண்டேனு என்பவர் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், நாட்டின் வளர்சிக்கு பிரதமர் சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே குரல் எழுப்பினர்.

இதனால், உட்கட்சியில் ஏற்பட்ட அதிகாரப் போராட்டங்களைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிரதமர் உத்தரவிட்டார். இதனையடுத்து, அந்நாட்டு பாராளுமன்றத்தில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள 240 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 7 வாக்குகளே அரசுக்கு ஆதரவாக கிடைத்தது. இதனால், அரசு கவிழ்ந்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் பலர் தங்களது பொறுப்புகளை ராஜீனாமா செய்து பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய பிரதமராக க்ளோசஸ் யோஹானிஸ் முன்மொழியப்படலாம் என்றும் அவர் தனது தரப்பு ஆதரவை 10 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிரூபிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply