shadow

அந்த கண்கொள்ளா காட்சியை நான் பார்க்கவில்லை: ரோஹித் வருத்தம்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிஹாதா கோப்பையின் இறுதியாட்டத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த தினேஷ் கார்த்திக்கின் அந்த அற்புதமான ஷாட்டை தான் பார்க்கவில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறுகையில், ‘ ‘‘நான் தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி சிக்சரை நான் பார்க்கவில்லை. நான் சூப்பர் ஓவருக்கு தயாரானேன். அதனால் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து எழுந்து பேடு கட்டுவதற்காக டிரெஸ்ஸிங் அறைக்கு நடந்து கொண்டிருந்தேன்.

ஆனால், தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்தது மிகப்பெரிய சந்தோசம். அவர் அதிக அளவில் விளையாட போதிலும், அவரது பவரை வெளிப்படுத்தினார்’ என்று கூறினார்

Leave a Reply