shadow

நான்கே நாளில் கைதான சென்னை வங்கி கொள்ளையன்: நேபாளத்தில் சுற்றி வளைப்பு

கடந்த வாரம் சனிக்கிழமை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வங்கியின் லாக்கரில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற அந்த வங்கியின் காவலரை நேற்றிரவு போலீசார் நேபாளத்தில் கைது செய்தனர்.

சென்னை வங்கியில் துப்பரவுப் பணியாளராக இருந்த நேபாளத்தைச் சேர்ந்த சபிலால் மற்றும் அவரின் மகன் தில்லு ஆகியோர் கடந்த சனிக்கிழமை கேஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து அதில் இருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளைக்குப் பின் கொள்ளையர்கள் நேபாளம் சென்றிருக்கலாம் என்பதால், அவர்களைத் தேடி 5 தனிப்படை போலீஸார் நேபாளத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில் கொள்ளையனின் செல்போன் நம்பர்களை டிராக் செய்தபோது அவன் நேபாளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இண்டர்போல் போலீசார் உதவியுடன் தமிழக போலீசார் கொள்ளையனை நேபாளத்தில் சபிலால் என்ற கொள்ளையனை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சபிலால் விரைவில் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply