shadow

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இம்மாதம் 15ஆம் தேதி முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், வேட்பு மனுக்களை இம்மாதம் 27ஆம் தேதிக்குள் வாபஸ் பெறலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 12ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சிகள் பரபரப்பு அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply