shadow

ஆர்.கே.நகர்a பாஜக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகரில் ஏற்கனவே ஐந்து முனை போட்டி இருந்து வரும் நிலையில் தற்போது ஆறாவது வேட்பாளராக பாஜகவும் தனது வேட்பாளரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

நேற்று பாஜக ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனை அறிவித்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பாஜகவில் சேர்ந்த கங்கை அமரன், ஏற்கனவே தனக்கு சொந்தமான பண்ணை வீட்டை சசிகலா குடும்பத்தினர்களிடம் பறிகொடுத்தவர்

சசிகலா சிறைக்கு சென்ற பின்னரே இந்த உண்மையை போட்டுடைத்த கங்கை அமரனுக்கு தற்போது சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரனை பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவே கருதப்படுகிறாது.

தமிழகத்தில் தற்போது குழப்பமான அரசியல் சூழல் இருப்பதால் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் நிச்சயமான ஆர்.கே,நகர் மக்கள் தன்னை வெற்றி பெற செய்வார்கள் என்றும் கங்கை அமரன்  தெரிவித்துள்ளார்

Leave a Reply