shadow

சுனந்தா புஷ்கர் கொலையில் திடீர் திருப்பம்! சசிதரூர் சிக்குவாரா?

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்பாவின் மரணம் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி, இந்த கொலை குறித்த முக்கிய ஆதாரங்களை நேற்று வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு சசிதரூருக்கு பெரும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் டெல்லி லீலா பேலஸ் ஓட்டலில் கடந்த 2014ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்த மரணத்தை முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், பின்னர் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இருப்பினும் கொலையாளி குறித்த எந்த தகவலையும் போலிசார் வெளியிடவில்லை

இந்த நிலையில் நேற்றிரவு ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள சில ஆடியோ டேப்பில், “சுனந்தா உயிரிழந்தது, சசிக்கு முன்பே தெரியும் என்றும் சுனந்தா 307-வது அறையில் கொல்லப்பட்டு பின் 345-வது அறைக்கு மாற்றப்பட்டது உள்பட பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்து வரும் போலீசாருக்கு இந்த டேப் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

Leave a Reply